கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் சண்டையில் ஈடுபட்ட ஒரு குழுவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது கேமராவில் சிக்கி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. நேற்று (ஜனவரி 10ஆம் தேதி) முகநூலில் பதிவேற்றப்பட்ட 22 வினாடிகள் கொண்ட காணொளியில், புக்கிட் பிந்தாங் மோனோரயில் நிலையம் அருகே சிலர் சண்டையில் ஈடுபட்டதைக் காட்டியதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா கூறினார்.
காணொளியில் காணப்பட்ட நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தகவல் தெரிந்தவர்கள் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-2600222 என்ற எண்ணிலோ அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115999 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.