கோலாலம்பூர், ஜனவரி 12 :
வெள்ளம் தொடர்பான 13 புதிய தொற்று நோய்கள் பதிவாகியதாக இன்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது 12 கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் (ARI) மற்றும் ஒன்று தீவிர இரைப்பை குடல் அழற்சி (AGE) ஆகியவற்றை உள்ளடக்கியது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“இதுவரை வெள்ளத்துடன் தொடர்புடைய மொத்தம் 2,455 தொற்று நோய்கள் பதிவாகியுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஜோகூர் மற்றும் மலாக்காவில் தற்போது 27 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் 1,086 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மொத்தம் 470 கோவிட்-19 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன, அவர்களில் 15 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இருப்பினும், இன்று புதிய தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.