இன்று 3,074 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் இன்று 3,074 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. தற்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2,805,337.ம் கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 5.3 % குறைந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் கோவிட் நவ் போர்டல் வழியாக அடுத்த நாள் மாநில வாரியாக புதிய தொற்றுகளின் விவரத்தை மட்டுமே வெளியிடும். 3,346 புதிய வழக்குகள் பதிவாகிய நேற்றைய (ஜனவரி 14) மாநில வாரியான விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (1,006), ஜோகூர் (380), கோலாலம்பூர் (280), கிளந்தான் (270), சபா (244), பகாங் (204), பினாங்கு (198), கெடா (178), மலாக்கா (166), நெகிரி செம்பிலான் (157), பேராக் (137), தெரெங்கானு (56), புத்ராஜெயா (34), பெர்லிஸ் (15),சரவாக் (13), லாபுவான் (8).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here