சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தின்படி, நேற்று 44 கோவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதில் 10 பேர் சேர்க்கப்பட்டபவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 30,831 ஆக உள்ளது.
ஜொகூரில் எட்டு என பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து சபா (6), தெரெங்கானு (5), பகாங் (4), பினாங்கு (4), சிலாங்கூர் (4), சரவாக் (3), கெடா (2), கிளந்தான் (2), நெகிரி செம்பிலான் (2), பேராக் (2), கோலாலம்பூர் (1) மற்றும் மலாக்கா (1). பெர்லிஸ், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் இறப்புகள் எதுவும் இல்லை.
நள்ளிரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) 393 உட்பட 60,873 செயலில் உள்ள தொற்றுள் உள்ளன. அவர்களில் 212 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 4,997 குணமடைந்துள்ளதாக்ஃ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,683,523 ஆக உள்ளது.