சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,245 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 2,342 தொற்றுகளில் இருந்து கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,813,934 ஆக உள்ளது என்றார். 3,093 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,741,355 ஆக உள்ளது.
இதற்கிடையில், 183 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 128 பேருக்கு கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 84 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 52 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இன்று 2,971 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,882 மலேசியர்கள் மற்றும் 89 வெளிநாட்டினர் மற்றும் 274 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள். இதில் 187 மலேசியர்கள் மற்றும் 87 வெளிநாட்டவர்கள் உள்ளனர். நோயறிதலின் போது புதிய நோய்த்தொற்றுகளில் 1.2% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுகள் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
நாட்டின் கோவிட்-19 நோய்த்தொற்று விகிதம் (R-nought, அல்லது R0) 0.98 ஆக இருந்தது. லாபுவானில் அதிகபட்சமாக 1.06 R0 உள்ளது. அதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் 1.05, சபா (1.04), மலாக்கா (1.04) மற்றும் சிலாங்கூர் (1.00). மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்கள் R0 அளவை 1.00க்குக் கீழே பதிவு செய்துள்ளன. இன்று 17 புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்தார்.