செயற்கை சூரியனை தொடர்ந்து இப்போ செயற்கை சந்திரன்! ; உலகை திரும்பிப் பார்க்கவைக்கும் சீனா

செயற்கை சூரியனை உருவாக்கி ஆராய்ந்து வரும் சீனா, தற்போது செயற்கையான நிலவை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கை நிலவின் மேற்பரப்பில் நிலவில் உள்ளது போன்றே பாறைகளும், தூசுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்வெளி திட்டங்களை சோதிக்கவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த செயற்கை நிலவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கை நிலவைக்கொண்டு, நிலவில் முப்பரிமானங்கள் மூலம் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்தும் சீனா பரிசோதனை நடத்தவுள்ளது.

2030 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கச் சீனா திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here