தம்பின், ஜனவரி 23 :
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், தம்பினில் உள்ள மூன்று ஃபெல்டா பகுதி, கேமாஸ் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தப்பீஸ் காஸ் மற்றும் ஓப்ஸ் சாராங் ஆகிய நடவடிக்கையில், 41 போதைப்பித்தர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தம்பின் மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (BSJND) 6,400 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் கைப்பற்றப்பட்டது.
தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அனுவால் அப் வஹாப் கூறுகையில், இந்த நடவடிக்கையானது, தம்பின் மாவட்டத்தில், குறிப்பாக ஃபெல்டா பகுதியில் உள்ளபோதைப்பொருள் விநியோக மையங்கள் என நம்பப்படும் இடங்களை கண்காணித்ததன் பின்னர், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
“தம்பின் மற்றும் ஃபெல்டா புக்கிட் ஜலூரைச் சுற்றி நடத்தப்பட்ட சோதனைகள் ஒன்பது போதைப்பித்தர்களை கைது செய்ய முடிந்தது மற்றும் 4 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் சயாபு ஆகியவற்றைக் கைப்பற்றியது.
“ஃபெல்டா சுங்கை கெலமா பகுதியில் உள்ள போதைப்பொருள் விநியோக மையமாக செயல்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய 13 போதைக்கு அடிமையானவர்களை டோக்கன்களுடன் கைது செய்யதது.
மேலும் அவர்களிடமிருந்து 60 கிராம் எடையுள்ள ஹெரோயின் மற்றும் 7 கிராம் எடையுள்ள சியாபு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதைப்பொருட்களின் பெறுமதி 3,500 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து, ஃபெல்டா ஜெலாய் 4 பகுதியான கேமாஸில் அடுத்த சோதனையில் 27 முதல் 65 வயதுடைய 19 ஆண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அவர்களிடமிருந்து 35 கிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் 6 கிராம் எடையுள்ள சியாபு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் பெறுமதி 2,300 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 12 போதைப்பித்தர்கள் மீது, அபாயகரமான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39C இன் கீழ் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு அதே சட்டத்தின் பிரிவு 15 (1) (a) இன் கீழ் அவர்கள் இரண்டு முந்தைய பதிவுகளை வைத்திருப்பதால், அதே சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றார்.
“பிரிவு 39B, பிரிவு 39A (1), பிரிவு 12 (2) மற்றும் பிரிவு 15 (1) (a) ADB 1952 இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் 4 முதல் 7 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.