புக்கிட் மெலாத்தியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூத்த குடிமகன் மரணம்

நீலாய், பிப்ரவரி 7 :

நேற்று இங்குள்ள புக்கிட் மெலாத்தியில் உள்ள சென்டிபீட் சாலையில் நடைப்பயணம் போய்க்கொண்டிருந்த மூத்த குடிமகன் ஒருவர், உயிரிழந்தார்.

பி. ராமகிருஷ்ணன் என்ற 69 வயதுடைய நபர் தனியாக மலையேறும் நடவடிக்கைக்கு சென்றதாகவும், மாலை 6 மணியளவில் மயக்கமடைந்த நிலையில், மற்றொரு மலையேறுபவர் அவரைக் கண்டு பிடித்ததாகவும் நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் மாட் கானி லத்தே தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் செப்பாங்கில் உள்ள சலாக் திங்கியைச் சேர்ந்தவர் என்றும் மலையேறுபவர் அவரைப் பார்த்தபோது, அவர் மயக்கமடைந்திருந்தார் என்றும் அந்த நேரத்தில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

“பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரது உடல் மேல் நடவடிக்கைக்காக சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மட் கானி கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கு இதயப் பிரச்சினைகள் இருப்பதாகவும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here