சின்னதா ஒரு நோய் அறிகுறி வந்து ஒரு மருத்துவர்கிட்ட ஆலோசனை கேட்கப் போனா அவுங்க கொடுக்கிற அட்வைஸ் பார்த்தா நம்ம பயந்தே போயிடுவோம். அதைவிட அவுங்க கொடுக்கிற மருந்துப்பொருட்களோட விலையைப் பார்த்தா தலையே சுத்திப்போயிடும். ஆனா நமக்கு இயற்கை எப்படிப்படட அதிசயங்கள் கொடுத்திருக்கு பாருங்க.
ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.
இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண் டாக்கும்.
ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவா ரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இது போல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மறைந்துவிடும்.
வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும். தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஆவாரை பயன்படுகிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.
ஆவாரம் பூவோடு பாசிப்பயறைச் சேர்த்து அரைத்து தோலில் தேய்த்து குளித்தால் தோலில் நமைச்சல், அரிப்பு வராது. ஆவாரம் பூவை கஷாயமிட்டு குடித்தால் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் கட்டுப்படும்.ஆவாரம் பூவை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் சூடு தணியும். 15 மல்லிப்பூக்களை அலசி கஷாயமாக்கி குடித்து வர படபடப்பு நீங்கும். நன்கு உறக்கம் வரும்.பெண்களுக்கு மார்பில் பால் கட்டி கொண்டு, மார்பில் வலி குறைய மல்லிகைப்பூவை அரைத்து மார்பில் கட்டினால் கட்டிகள் கரையும். வலியும் நீங்கும்.