கோத்தா கினாபாலு, பிப்ரவரி 9 :
பிதாஸில் வெள்ள நிலைமை சீரடைந்ததன் காரணமாக அங்கு செயல்பட்டு வந்த அனைத்து தற்காலிக வெள்ள நிவாரண மையங்களும் (பிபிஎஸ்) இன்று பிற்பகல் முழுமையாக மூடப்பட்டன.
சபா பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று நண்பகல் சுமார் 12 மணியளவில் அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் மூடப்படும் எனத் தெரிவித்தது, இதில் கடைசி இரண்டு வெள்ள நிவாரண மையங்களான, அதாவது டேவான் கம்போங் குசிலாட் மற்றும் டேவான் கம்போங் சினுகாப் ஆகியவையம் அடங்கும்.
வெள்ளச் நிலைமை சீரடைந்து வருவதால் பிபிஎஸ் இல் தஞ்சமடைந்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று காலை, கம்போங் குசிலாட், கம்போங் தேசா செபெராங், கம்போங் கனிபோங்கான், கம்போங் போரிபி மற்றும் கம்போங் உண்டாங்-உண்டாங்/முலுங் குலுங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 183 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 559 பேர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை, கோத்தா கினாபாலு, பிதாஸ் மற்றும் கூடாத் உள்ளிட்ட சபாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பு செயதிருந்தது குறிப்பிடத்தக்கது.