கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 8,439 ஆக உயர்வு

கோத்தா பாரு, பிப்ரவரி 28:

கிளாந்தான் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கன மழையத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை நேற்று மாலை 6,316 பேராக இருந்து இன்று காலை 8,439 பேராக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 2,745 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் மாநிலத்திலுள்ள 70 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் ஜைனல் மடாசின் தெரிவித்தார்.

மேலும் இதுவரை இவ்வெள்ளப் பேரிடரில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

“வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள நீரில் விளையாட வேண்டாம் என்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here