ஷா ஆலாம், மார்ச் 8 :
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 1,215 பேரில் இருந்து இன்று மாலை 1,030 பேராக குறைந்துள்ளது.
267 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் கோம்பாக், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் உள்ள 8 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன் தகவலின் அடிப்படையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி, கோம்பாக்கில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்டாலிங்கில் 869 பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள 4 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், உலு லங்காட்டில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கோலா சிலாங்கூர் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் இரண்டு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன.
மேலும் தொடர் கனமழை காரணமாக ஜாலான் லாடாங் கலிடோனியன், பத்து ஆராங் ஆகிய இடங்களில் பாறை சரிவு சம்பவங்களும் பதிவாகின.