உலு திரெங்கானு, மார்ச் 14 :
இன்று, உலு திரெங்கானு மருத்துவமனையில் (HHT) இருந்து தப்பிய ஒரு கோவிட்-19 நோயாளி, அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சறுக்கியதால், இங்குள்ள ஜாலான் கோலத்திரெங்கானு – பெராங்கின் 28 ஆவது கிலோமீட்டரில் இறந்தார்.
கம்பபோங் கோலா ஜெனெரிஹ் பகுதியைச் சேர்ந்த காசிம் அப்துல்லா, 66, என்ற பாதிக்கப்பட்டவர், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் இடத்தில், பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.
HHT இல் கோவிட்-19 நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பாதிக்கப்பட்டவர், மருத்துவமனை ஊழியர்களுக்கு சொந்தமான ஹோண்டா சி100 மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக உலு திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைமை துணை கண்காணிப்பாளர் முகமட் அட்லி மாட் டாட் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையின் சூராவ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தினார் என்றும் போக்குவரத்துக்கு எதிராக வகாஃப் தபாய் நகரத்தை நோக்கி தப்பி ஓடியதும் கண்டறியப்பட்டது என்றார்.
“அவர் புக்கிட் பெர்பாட் சந்திப்பில் வந்தவுடன், மூத்த குடிமகன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் திடீரென சாலைத் தடுப்பின் மீது சறுக்கி விழுந்தது, இதனால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக HHT தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.









