தெலுக் இந்தானில் கடந்த புதன்கிழமை (மார்ச் 9) தனது தாயால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட இரண்டு வயது சிறுமி மரணமடைந்தார். குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகக் கூறி 33 வயதான தாய் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஹிலிர் பேராக் OCPD உதவி ஆணையர் அகமட் அட்னான் பஸ்ரி கூறுகையில், அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவரைச் சந்தித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் உடலில் முதற்கட்ட பரிசோதனையில் மூக்கு, கன்னம், காதுகள் மற்றும் தலையின் பின்பகுதியில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வலது கை, இடது கையின் ஆள்காட்டி விரல் ஆகியவற்றில் பெரிய காயங்களின் தடயங்கள் இருந்தன.
இடது கை தோள்பட்டை அருகே கடித்த அடையாளங்கள், இடது காலில் தழும்புகள், இடது முழங்காலுக்கு கீழே காயங்கள், வலது தோள்பட்டையில் காயங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடலின் பின்புறம் முழுவதும் பல காயங்கள் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
ACP அகமட் மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அதே நாளில் மாலை 5 மணியளவில் தெலுக் இந்தான் காவல் நிலையத்தில் சரணடைந்தபோது போலீசார் கைது செய்தனர்.