ஜாலான் லாமா புக்கிட் புத்தூஸ் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான விசாரணைக்காக ஒரு பெண் உட்பட மூவர் கைது!

சிரம்பான், மார்ச் 23 :

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜாலான் லாமா புக்கிட் புத்தூஸ், 14 ஆவது கிலோமீட்டருக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில், அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அடையாளம் காணப்படாத சடலம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், நேற்று இரவு 8.50 மணியளவில், இங்குள்ள தேமியாங், தாமான் நீ யானில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் ஒரு பெண் ஜாலான் பெர்சியரான் உத்தமா S 2/4, சிரம்பான் 2, சிரம்பான் என்ற முகவரியுள்ள வீட்டில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 7 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் தெரிவித்தார்.

இங்குள்ள ஜாலான் லாமா புக்கிட் புத்தூஸ், கிலோமீட்டர் 14 இல் ஜோக்கிங் செய்யும்போது படம் எடுக்க விரும்பிய ஒருவர், பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் மார்ச் 21 அன்று உள்ளூர் ஊடகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here