கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 1,264 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 1,264 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 777 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 ஆகவும், 487 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 ஆகவும் உள்ளன.

சிலாங்கூர் 249 புதிய சேர்க்கைகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பேராக் (136) மற்றும் கோலாலம்பூர் (122) உள்ளன. நேற்று 1,228 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் மொத்த கொள்ளளவான 882 படுக்கைகளில் 36% இல் இருப்பதாகக் கூறினார்.

புத்ராஜெயா (100%), கோலாலம்பூர் (67%), சிலாங்கூர் (59%), பெர்லிஸ் (55%), ஜோகூர் (53%), மற்றும் கிளந்தான் (52%) ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள ஐசியூ படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன. மொத்தம் 195 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 22% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சிலாங்கூர் (79%), புத்ராஜெயா (72%), கோலாலம்பூர் (64%), தெரெங்கானு (60%), மலாக்கா (59%), பேராக் (57%) சரவாக் (55%), மற்றும் நெகிரி செம்பிலான் (54%)  ஆகிய இடங்களில் சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியுள்ளது.

அரசாங்க மருத்துவமனைகளில் கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை, முக்கியமான படுக்கைகள் 66% ஆகவும், 58% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன. நேற்று நான்கு புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன. கோவிட்-19 தொற்று விகிதம் (R0) 0.91 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here