போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, 59 வயது நபர் ஒருவர் போலீஸ் லாக்கப்பில் தூக்குப்போட்டு இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
செபராங் ஜெயா மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை மூலம் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டதாக புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வழக்கு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், ஆடவரின் மரணம் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று துறையின் பிரதிப் பணிப்பாளர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் மார்ச் 22 அன்று இரண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் மற்றும் செபராங் பெராய் செலாத்தான் பொலிஸ் தலைமையகத்தில் அடைக்கப்பட்டார். மறுநாள் அவர் இறந்து கிடந்தார்.