12 மீட்டர் உயரத்தில் இருந்து லோரி கவிழ்ந்தது – கிள்ளானில் சம்பவம்

கிள்ளான், ஜாலான் பெலாபுஹான் கிள்ளான் பகுதியில் செவ்வாய்க்கிழமை 12 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து விழுந்த கன்டெய்னர் மோதியதில் லாரி டிரைவர் காயமடைந்தார்.

பிற்பகல் 1.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ருசைனி ஹசானி 49, மேல் சிகிச்சைக்காக இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில், ஒரு லோரியில் இருந்து மறுசுழற்சி பெட்டி கொண்ட கொள்கலன் மேம்பாலத்தின் மேல் இருந்து விழுந்தது. அப்போது மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த 2  கண்டெய்னர் லோரிகள் மீது மோதியது. லோரிகளில் ஒன்று முன்பக்கத்தில் மோதியதில் டிரைவர் சிக்கிக்கொண்டார் என்று அவர் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

நண்பகல் 1.17 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து கோத்தா ராஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here