எஸ்கலேட்டரில் குழந்தையின் கால் சிக்கியது; IOI ஷாப்பிங் மாலில் சம்பவம்

புத்ராஜெயா, ஏப்ரல் 10 :

இங்குள்ள IOI ஷாப்பிங் மாலில் உள்ள எஸ்கலேட்டரில் 3 வயது குழந்தையின் வலது கால் சிக்கிக் கொண்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

பிற்பகல் 1.48 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் தனது பெற்றோருடன் இருந்ததாக நம்பப்படுகிறது, அவரது கால்கள் சிக்கிக்கொள்ளும் முன்னர், எஸ்கலேட்டரைப் பயன்படுத்தி வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து, அவர்கள் கீழே வந்ததாகக் கூறப்படுகிறது.

சைபர்ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், தங்களுக்கு பிற்பகல் 1.48 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து உறுப்பினர்களுடன் பிற்பகல் 2.01 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

அவர் கூறுகையில், குழந்தை தனது பெற்றோருடன் எஸ்கலேட்டரில் இறங்கியபோது மாலின் இரண்டாவது மாடியில் இந்த சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்டவரின் கால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக செர்டாங் மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here