கார்- மோட்டார் சைக்கிள் விபத்து; போலீஸ்காரர் பலி

உலுசிலாங்கூர்,  தாமான் கெம்போஜா சந்திப்பில் நேற்றிரவு  மோட்டார் சைக்கிள் கார் சம்ப்ந்த்ப்பல்ல்ல் ஒரு போலீஸ்காரர் இறந்தார்.

பாதிக்கப்பட்ட கார்ப்ரல் இஷாம்சிக் அப்துல் ஹமீத் 40, தனது பணிகளை முடித்துவிட்டு புக்கிட் செந்தோசாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 8.32 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று ஹுலு சிலாங்கூர் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அர்ஸாத் கமருடின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் ஹுலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) ரோந்து கார் பிரிவு (MPV) கிளையில் பணிபுரிந்தார். தாமான் கெம்போஜா சந்திப்பில் நுழைய விரும்பிய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற டொயோட்டா வியோஸ் கார் மீது அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மோதலில் பலியானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அர்ஸாத் கூறினார். உடல் பிரேத பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இரவு இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அழைப்பு வந்தது.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழு மற்றும் இயந்திரங்கள் மற்றும் புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) அவசரகால பராமரிப்பு மீட்பு சேவை (EMRS) வாகனங்கள் அந்த இடத்தில் இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here