சுபாங் ஜெயா, ஏப்ரல் 25 :
இங்கு அருகேயுள்ள சன்வே பிரமிட் ஷாப்பிங் சென்டருக்கு எதிரே உள்ள ஜாலான் PJS 11, பண்டார் சன்வேயில் நேற்றிரவு கார் தீப்பிடித்ததில், ஓட்டுநர் காயமடைந்தார்.
நேற்று மாலை 7.57 மணிக்கு MERS 999 அழைப்பின் மூலம் மாவட்ட கட்டுப்பாட்டு மையமான சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) புகார் செய்வதற்கு முன், இந்த சம்பவம் பொதுமக்களால் கண்டறியப்பட்டது.
சிலாங்கூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர், கண்காணிப்பாளர் அஸ்மான் ஷாரி கூறும்போது, ஆரம்ப விசாரணையில், புரோத்தான் ரக கார் என நம்பப்படும் கார், சாலைத்தடுப்பில் மோதி தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“தீயினால் சம்பந்தப்பட்ட கார் முற்றிலும் சேதமடைந்தது.
“சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்களின் குழு அந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை வெற்றிகரமாக அணைத்தது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இதுவரை காயமடைந்த ஓட்டுநர் அடையாளம் காணப்படவில்லை.
“இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.