பாலம் இடிந்து விழுந்ததில் நால்வர் காயம்

மிரி, ஏப்ரல் 26 :

இன்று, முலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் தியோங் லிங் ஹி கூறுகையில், பிற்பகல் 2.50 மணியளவில் பாதிக்கப்பட்ட அனைவரும் பாலத்தில் உள்ள இடத்தை ஆய்வு செய்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெல்ஜியத்தைச் சேர்ந்த ரிசார்ட்டின் பொது மேலாளர் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரிசார்ட் மேலாளரும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

அவர்களுடன் அடையாளம் தெரியாத ஏனைய இரண்டு பேர் உள்ளூர்வாசிகளும் காயமடைந்ததாக லிங் ஹி கூறினார்.

“பிற்பகல் 3 மணியளவில் ஊழியர்களிடமிருந்து அறிக்கையைப் பெற்றதன் பேரில் JBPM மலை மற்றும் குகை தேடல் மற்றும் மீட்புக் குழுவின் (MOCSAR) நான்கு உறுப்பினர்கள் மூலம் மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​பாதிக்கப்பட்ட நான்கு பேர் காயமடைந்தது கண்டறியப்பட்டது, அவர்களில் மூன்று பேர் ரிசார்ட் ஊழியர்களால் முலு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர், காயங்களுக்கு உள்ளான மற்றையவரான ஜெர்மன் நாட்டவர் MOCSAR தீயணைப்பு வீரர்களால் ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டார்.

“இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here