இரு சகோதரிகளை துன்புறுத்திய வழக்கில் தாயார் கைது

அலார் ஸ்டார், இரண்டு உடன்பிறப்புகளை அவர்களது வளர்ப்பு தந்தை துன்புறுத்தியதாக கூறப்படும் தாயை, போலீசார் நேற்று விசாரணைக்காக கைது செய்தனர்.

 31 வயதுடைய பெண் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோத்தா செத்தார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஹ்மத் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

வளர்ப்பு தந்தையை போலீசார் நேற்று கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கெடாவில் மூன்று மற்றும் ஆண்டு ஒன்று ஆண்டு படிக்கும் இரண்டு சகோதரிகள், அவர்களின் மாற்றாந்தந்தை என  கருதப்படுவரால் காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவித்தார்.

உடன்பிறப்புகளை பரிசோதித்த மருத்துவ அதிகாரி ஒருவர் அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் சகோதரிகள் இருவரும் கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here