கோத்த கினபாலுவில் லஞ்சம் பெற்றதாக போலீஸ் ஆய்வாளர் மீது ஒருவர் வியாழக்கிழமை (மார்ச் 21) சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டிசம்பர் 2020 மற்றும் நவம்பர் 2021 க்கு இடையில் பணம் மாற்றியவர்களிடமிருந்து மொத்தம் 4,000 ரிங்கிட் பெற்றதாக 45 வயதான லிஃபிண்டி ஜியுபின் மீது எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தனிநபரிடமிருந்து ஆன்லைன் பரிமாற்றக் கட்டணங்கள் மூலம் மாதந்தோறும் 500 ரிங்கிட் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி ஜேசன் ஜூகா முன் அவர் குற்றமற்றவர் என்று கூறி விசாரணைக் கோரினார். அவர் சார்பாக வழக்கறிஞர் டத்தோ ராம் சிங் வாதிட்டார்.
குற்றப்பத்திரிகையின்படி துவாரனில் உள்ள வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த லிஃபிண்டி 2020 டிச. 24 அன்று முதல் கட்டணத்தைப் பெற்றுள்ளார். மேலும் 2021 மார்ச் 27 முதல் மேலும் ஏழு முறையும் அதைத் தொடர்ந்து மே 24, ஜூன் 26, ஜூலை 28 , ஆகஸ்ட் 26, செப்டம்பர் 27, கடைசியாக நவம்பர் 23 என்று இந்தக் கட்டணங்கள் டாங் புவான் செங் கிரெடிட் சென்.பெர்ஹாட் செயல்பாடுகளைப் பாதுகாக்கும் என்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
நீதிபதி ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) அலுவலகத்தில் ஆஜராகுமாறும் அவரது அனைத்துலக அவரது வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தில் சரணடையுமாறும் லிஃபிண்டிக்கு அறிவுறுத்தினார்.
MACC சட்டம் 2009 (கார்ப்பரேட் பொறுப்பு விதி) பிரிவு 17(a) இன் கீழ் லிஃபிண்டி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது அதே சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் தண்டனைக்குரியது. அவர் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். மேலும் ஐந்து மடங்கு லஞ்சத் தொகை அல்லது மதிப்பு அல்லது 10,000 ரிங்கிட் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும்.