சிரம்பான், ஜாலான் துங்கு குர்ஷியா என்ற இடத்தில் லோரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது மாணவர் உயிரிழந்தார்.
SMK Dato’ Hj Redza மாணவரான இறந்தவர், காலை 8.45 மணியளவில் விபத்து ஏற்பட்டபோது, ஜாலான் சிகாமட் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
சிரம்பான் OCPD உதவி ஆணையர் நந்தா மரோஃப் கூறுகையில், இறந்தவர் சமிஞ்சை விளக்கை மீறி சென்றதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது லோரியின் வலது பக்கம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.