கடந்த ஆண்டை விட டெங்கு இவ்வாண்டு 52% அதிகரித்துள்ளது

டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில்  52.4% அதிகரித்து. 10,597ல் இருந்து 16,145 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை முந்தைய தொற்றுநோயியல் வாரத்திலிருந்து (EW) 32.2% அதிகரித்து 1,074லிருந்து 1,420 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார தலைமை இயக்குநர் டான்ஶ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா, ஹாட்ஸ்பாட் இடங்களின் எண்ணிக்கை முந்தைய EW க்குப் பிறகு 36 இலிருந்து 41 ஆக அதிகரித்துள்ளது என்றார். பெரும்பாலான ஹாட்ஸ்பாட்கள் சிலாங்கூரில் அமைந்துள்ளன, சில கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா, மேலாக்கா மற்றும் சபாவில் உள்ளன. இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் ஒன்பது மரணங்கள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here