பிளாசா பெலாங்கி அருகேயுள்ள சமிக்ஞை விளக்கு சந்திப்பில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் மரணம்

ஜோகூர் பாரு, ஜூன் 1:

பிளாசா பெலாங்கி ஷாப்பிங் மால் அருகேயுள்ள, போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில், ஒரு பெரோடுவா கன்சில் கார், புரோத்தோன் வீரா கார் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (ஜூன்.1) காலை 9.10 மணியளவில், பெரோடுவா கன்சில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த சாலைத் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில் நின்றுகொண்டிருந்த புரோத்தோன் வீரா கார் மீது விபத்துக்குள்ளானதாக ஜோகூர் பாரு தெற்கு காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமட் கூறினார்.

இந்த விபத்தில், 50 வயதுடைய பெரோடுவா கன்சில் கார் ஓட்டுநர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், வீரா கார் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் ரவூப் தெரிவித்தார்.

ஏழு மாதங்களில் அந்த இடத்தில் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here