கார் மரத்தில் மோதியதில் ஓட்டுநர் பலி

கோலாலம்பூர், ஜூன் 20 :

இங்குள்ள ஜாலான் சையட் புத்ராவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் முன்புறம், சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை 5.15 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக, தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

“ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு வாகனங்களுடன் மொத்தம் 11 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்ததும், “Toyota Fortuner sports utility vehicle (SUV) விபத்துக்குள்ளாகியிருந்தது, அது அந்த இடத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் 30 வயதுடைய ஒருவர் ஆபத்தான நிலையில் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டதாக அவர் கூறினார்.

“காலை 6 மணியளவில் பாதிக்கப்பட்டவர் தீயணைப்பு வீரர்களால் காரிலிருந்து அகற்றப்பட்டார், ஆனால் அங்கிருந்த மருத்துவக் குழுவால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது மற்றும் தமது மீட்பு நடவடிக்கை காலை 6.14 மணியளவில் முழுமையாக முடிந்தது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here