Cradle Fund தலைமை செயல் அதிகாரி நஸ்ரின் கொலை வழக்கு; மனைவி உள்ளிட்ட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்

Cradle Fund தலைமை செயல் அதிகாரி நஸ்ரின் ஹசான் 2018 ஆம் ஆண்டில்  கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து மனைவி சமிரா முசாஃபர் மற்றும் இரண்டு பேரை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

47 வயதான சமிரா, தற்போது 19 மற்றும் 16 வயதுடைய இரு இளைஞர்கள் மற்றும் இந்தோனேசிய பணிப்பெண் ஏகா வஹ்யு லெஸ்டாரி ஆகியோர், ஜூன் 14, 2018 அன்று முத்தியாரா டாமன்சாராவில் உள்ள தங்கள் வீட்டில் நஸ்ரினை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

நஸ்ரினின் மரணத்திற்கு முதலில் அவரது படுக்கையறையில் ஏற்பட்ட தீ காரணமாக அவர் அருகில் இருந்த கைபேசி வெடித்ததாக கூறப்படுகிறது.

அவர் இறந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் அறிக்கைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகள்  குற்றப்பதிவு இருப்பதை காட்டியதை அடுத்து, இது ஆகஸ்ட் 6, 2018 அன்று கொலை என்று வகைப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here