போர்ட்டிக்சன், ஜூலை 26 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்படும் பெண்ணின் சடலம், இன்று இங்குள்ள போர்ட்டிக்சன் வாட்டர் ஃபிரண்ட் பகுதிக் கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது .
இன்று பிற்பகல் 1.48 மணிக்கு, அவரது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக போர்ட்டிக்சன் தீயணைப்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தலைவர் முகமட் ரோஸ்மன் முகமட் நோர் தெரிவித்தார்.
“ஒரு பெண்ணின் உடல் வீங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
“சோதனைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்து 1 இல் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர் காணாமல் போனதாகக் தேடப்பட்டு வந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
‘இறந்தவர் மாம்பாவ்வைச் சேர்ந்த 31 வயதான எலீன் சும் யீன் ஷா, என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர் ‘ என்று அவர் கூறினார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரோஸ்மன் தெரிவித்தார்.