குரங்கம்மைக்கு தடுப்பூசி மையம் திறந்தது பிரான்ஸ்..!

பாரீஸ், ஜூலை 27:

உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கம்மையை அனைத்துலக சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

இங்கு கடந்த வாரம் மட்டுமே 1,567 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதும், தலைநகர் பாரீசில் மட்டும் 726 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரான்சில் 1,700-க்கு மேற்பட்டோர் குரங்கம்மை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில்தான் அங்கு குரங்கம்மை தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here