போருக்கு மத்தியில் ‘போட்டோஷூட்’ – சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் அதிபர்

கீவ், ஜூலை.30:

உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் 150 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்காவின் பிரபல மாதாந்திர இதழான ‘வோக்’ இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.அமெரிக்காவின் பிரபல மாதாந்திர இதழான ‘வோக்’ இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் வெளியாகும் ‘வோக்’ இதழில் இந்த நேர்காணல் இடம் பெறுகிறது. இந்தநிலையில் அதற்கான முன்னோட்ட படங்களை ‘வோக்’ இதழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ‘வோக்’ இதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் படங்களும், ஜெலன்ஸ்கியும், ஒலனாவும் ஜோடியாக இருக்கும் படங்களும் உள்ளன.

இந்த புகைப்படங்கள் தைரியத்தை காட்டுக்கின்றன என ஒருபக்கம் வரவேற்பு இருக்க, மறுபக்கம் போர் நடக்கும் நேரத்தில் இப்படி ‘போட்டோஷூட்’ நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர்வினைகளும் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here