உடல் ஊனமுற்ற பெண்ணை துன்புறுத்தியதாக நம்பப்படும் தந்தை, அவரின் காதலி கைது!

அம்பாங், ஆகஸ்ட் 21 :

நரம்பியல் பிரச்சனைகள் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி பெண் (OKU) இங்குள்ள தாமான் ஸ்ரீ இந்தான் அம்பாங்கில் உள்ள லெம்பா ஜெயா செலாத்தானில் உள்ள அவரது குடும்ப வீட்டில் விளக்குமாறு குச்சி, ஹங்கர் மற்றும் துடைப்பான் குச்சியால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் 60 வயதுடைய தந்தை மற்றும் அவரது 47 வயது காதலியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறுகையில், நேற்று நண்பகல் 12 மணியளவில், அம்பாங் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் 31 வயது ஊனமுற்ற பெண் நோயாளியை சம்பவ இடத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

அவரின் சிகிச்சையின் முடிவுகளில் சில சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது வலது கண்ணில் காயம் மற்றும் அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் என நம்பப்படும் தழும்புகள் காணப்பட்டது.

“அதைத் தொடர்ந்து, நேற்று இரவு 8.30 மணியளவில், அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் உறுப்பினர்கள் குழு, கூலி வேலை செய்து கொண்டிருந்த அந்தப்பெண்ணின் தந்தையையும் வேலை இல்லாத அவரின் காதலியையும் கைது செய்தனர்.

“பாதிக்கப்பட்டவரை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விளக்குமாறு குச்சிகள், ஹங்கர்கள் மற்றும் துடைப்பான் குச்சிகள் போன்ற பல சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, மேலும் போதைப்பொருளுக்கு எதிரான சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் எதிர்மறையான பதிலைப் பெற்றனர்.

குற்றவியல் சட்டத்தின் 324 வது பிரிவின் படி விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here