ஈப்போ, செப்டம்பர் 7 :
இன்று புதன்கிழமை (செப்டம்பர் 7) ஜாலான் தாப்பா-கம்பாரில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு சீன நாட்டவர்கள் மற்றும் இரண்டு மலேசியர்கள் உட்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.
“அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் குழு, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்திருப்பதைக் கண்டதாகவும், மேலும் வாகனங்களுக்குள் சிக்கியவர்களை மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி வெளிக்கொண்டு வந்ததாகவும் கூறினார்.
“பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.