ஜோகூர் பாருவில் இருந்து சிம்பாங் ரெங்கம் நோக்கி செலும் வழியில் டிரெய்லர் தீப்பிடித்ததால் 15 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்

கூலாய், செப்டம்பர் 9 :

இங்கு அருகே உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (வடக்கு) 30.6ஆவது கிலோ மீட்டரில் டிரெய்லர் ஒன்று தீப்பிடித்ததால், 15 கிலோமீட்டருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிற்பகல் 3 மணி முதல் தற்போது வரை நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் டோக் பெங் இயோவ் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து மாலை 4 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்தது.

“ஜோகூர் பாருவில் இருந்து சிம்பாங் ரெங்கம் நோக்கி சென்ற டிரெய்லர் கட்டுப்பாட்டை இழந்து சாலை பிரிப்பான் மீது மோதி தீப்பிடித்தது என்றார்.

இந்த விபத்தில் “33 வயதான டிரெய்லர் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்றும் போக்குவரத்து நெரிசல் 15 கிமீக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here