குளுவாங்:
இன்று கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக தாமான் ஸ்ரீ குளுவாங்கில் ஜாலான் 1/4 இல், கார் மீது 15 அடி உயர மரம் விழுந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.59 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே ஒரு தீயணைப்பு மீட்பு FRT வாகனம் மற்றும் ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவையினர் (EMRS) உட்பட 8 தீயணைப்பு வீரர்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக குளுவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் ஜூசோ முகமட் சாலே கூறினார்.
“நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, மரம் ஒன்று காரின் மேல் விழுந்திருந்ததைக் கண்டோம். எவ்வாறாயினும், நாங்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே, அந்த வழியாகச் சென்றவர்கள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பியதால், ஓட்டுநர் பற்றிய தகவல் தெரியவில்லை, ”என்று அவர் கூறினார்.