கூச்சிங், செப்டம்பர் 16 :
நேற்றிரவு, ஜலான் ஜுலாவ்-பிந்தாங்கோர், பத்து 12, ஜாலான் ஜுலாவ்-பிந்தாங்கோர் என்ற இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர்களில் மாத்யூ மேனி ஜொனாதன், 25, மற்றும் நெல்சன் செண்டாங், 21 என அடையாளம் காணப்பட்ட நிலையில், உயிரிழந்த மற்றய ஆண் மற்றும் காயமடைந்த பெண் ஆகிய இருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சரவாக் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேற்று இரவு 10.24 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
பிண்டாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) ஏழு உறுப்பினர்கள் அழைப்பைப் பெற்றவுடன், அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“சம்பவ இடத்திற்கு வந்தபோது, அங்கு “பாதிக்கப்பட்ட மூன்று ஆண்கள் இருந்தனர், அனைவரும் சுயநினைவின்றி காணப்பட்டனர் என்றும் பின்னர் சோதனை செய்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த பெண் கனோவிட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் சிபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழந்த 3 பேரின் உடல்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக சிபு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.