1MDB வழக்கறிக்காக மீண்டும் நீதிமன்றம் வந்த நஜிப்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக், ஒரு வார இடைவெளிக்குப் பிறகு 1Malaysia Development Bhdடி வழக்கு விசாரணைக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரானார். தி மலேசியன் இன்சைட்டின் அறிக்கையின்படி, நஜிப் 12 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் காஜாங் சிறையிலிருந்து பாதுகாப்புடன் காலை 8.45 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது அமைதியாகக் காணப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் (எச்கேஎல்) அனுமதிக்கப்பட்டதால், நஜிப்பின் விசாரணையை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா கடந்த வாரம் ஒத்திவைத்திருந்தார். வெள்ளிக்கிழமை, செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை (CRH)  சிகிச்சைக்குப் பிறகு நஜிப் சிறைக்குத் திரும்ப மருத்துவமனை அனுமதி வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here