பொந்தியான், அக்டோபர் 7 :
வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் (GE15) ஜோகூரில் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களில் பெரும்பாலோர் புதிய முகங்களாக இருப்பார்கள் என்று டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தெரிவித்துள்ளார்.
மாநில பாரிசான் மற்றும் அம்னோ தலைவரான அவர் மேலும் கூறுகையில், அவர்களின் வேட்பாளர்களில் 60 விழுக்காட்டினர் புதிய முகங்கள் என்றும் மொத்தம் 26 வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் கூறினார்.
“ஜோகூரில் சிம்பாங் ரெங்காம் உட்பட 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் அம்னோ போட்டியிடும் அதே வேளையில், மசிச 8 இடங்களிலும் மஇகா ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
“தமது கட்சி தலைமையகத்தில் இருந்து இடமாற்று உத்தரவுகள் வரவில்லை என்றால், GE15 இல் பாரிசான் தனித்து செல்லும் என்பதால், ஜோகூரில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இடையே போட்டியிடும் இடங்களாக இவை ஒடுக்கப்படும் ” என்று அவர் மேலும் கூறினார்.
அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினரும், பொந்தியான் பிரிவுத் தலைவருமான ஹஸ்னி, வெள்ளிக்கிழமை (அக். 7) தலைமையகத்தில் நடைபெற்ற அம்னோ பெண்கள் பிரிவுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு இவ்வாறு கூறினார்.
பாரிசான் தன்னை ஜோகூர் தேர்தல் இயக்குநராக நியமித்ததாகவும், அதே சமயம் நடப்பு மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி GE15 க்கான மாநில இயக்க இயக்குனராக நியமித்ததாகவும் அவர் கூறினார்.