அன்வார் இப்ராஹிம் தம்புன் தொகுதியில் போட்டியிடுகிறாரா? அக்.29இல் தெரிய வரும்

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவாரா என்பது குறித்த முடிவு அக்டோபர் 29-ஆம் தேதி மட்டுமே தெரியவரும் என்று என்எஸ்டி தெரிவித்துள்ளது.

பேராக் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ முஜாஹிட் யூசுப் ராவா, மாநில PHஐ வலுப்படுத்த கூடுதல் மதிப்பை அன்வாரால் கொடுக்க முடிந்ததால், எதிர்க்கட்சித் தலைவரை அங்கு போட்டியிட வரவேற்பதாகக் கூறினார்.

அன்வார் தம்புனில் போட்டியிடுவாரா இல்லையா என்பது பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டின் போது அன்று அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். தம்புன் நாடாளுமன்றத் தொகுதி தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு வசம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here