வேன் – கார் மோதல்; ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த 10 பிள்ளைகள் காயம்; கார் ஓட்டுநர் பலி

கோத்தா திங்கியில் வெள்ளிக்கிழமை (நவ. 3) மாலை நடந்த விபத்தில் வேனில் இருந்த 10 ஆதரவற்ற இல்லத்தை குழந்தைகள் காயமடைந்தனர். ஃபெல்டா சுங்கை சயோங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் குளுவாங் -பண்டார் தெங்கராவில் மாலை 6.37 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக பண்டார் தெங்கரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி அவாங் இஸ்மாயில் அவாங் ஹனாஃபி தெரிவித்தார்.

பண்டார் தெங்கரா முஸ்லிம் ஆதரவற்றோர் நல அமைப்பின் வேனும் காரும் மோதிக்கொண்டன. 54 வயதான கார் ஓட்டுநர்  உள்ளே சிக்கிக் கொண்டார். பண்டார் தெங்கரா நிலையத்தில் இருந்து ஏழு தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களுடன் பாதிக்கப்பட்டவரை விடுவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வேனின் ஓட்டுநர் 41, காயங்களுடன் உயிர் தப்பினார். ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் என 10 பேர்  சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் கூறினார், குழந்தைகளின் வயது ஒன்பது முதல் 15 வரை இருக்கும். காயமடைந்தவர்கள் கூலாயில் உள்ள தெமெங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவாங் இஸ்மாயில் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here