சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லோரியின் பின்புறத்தில் கார் மோதியதில் இரண்டு GOF வீரர்கள் இறந்தனர்

கோத்த பாரு: ஜாலான் ரந்தாவ் பஞ்சாங்-பாசீர் மாஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லோரியின் பின்புறத்தில் கார் மோதியதில் இரண்டு பொது நடவடிக்கைப் படை (GOF) வீரர்கள் இறந்தனர்.

அதிகாலை 4.25 மணியளவில் நடந்த இந்த விபத்தில், பெங்கலன் சேப்பாவில் உள்ள 8வது பட்டாலியனைச் சேர்ந்த லான்ஸ் கார்ப்ரல் ஜெர்ரி லயோங் நயாலின் 32, மற்றும் கார்ப்ரல் ஜூனா ஜெம்பாட் 39, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பாசீர் மாஸ் போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நசருதீன்  நசீர் தெரிவித்தார். விபத்தின் போது லோரி ஓட்டுநர் வாகனத்தில் இல்லை. உடல்கள் பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here