பாமாயில் தொழிற்சாலையில் இயந்திரத்தில் விழுந்து ஊழியர் மரணம்

பிடோர், நவம்பர் 1 :

பிடோர் தொழிற்பேட்டை அருகே உள்ள பாமாயில் தொழிற்சாலையில் இயந்திரத்தில் விழுந்து 49 வயதுடைய தொழிற்சாலை ஊழியர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

தாப்பா மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் கூறுகையில், காலை 7.30 மணிக்கு விபத்து குறித்து தனது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பாமாயில் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. “பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ‘எரிபொருள் கன்வேயர்’ இயந்திர ஆபரேட்டராக உள்ளார் என்றும் அவர் கடந்த 2013 முதல் அங்கு பணிபுரிந்து வருகிறார்” என்றும் போலீசின் ஆரம்ப விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

“பலியானவர் சுமார் 4.5 மீட்டர் உயரமுள்ள இயந்திரத்தில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

இறந்தவராது உடல் பிரேத பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது.

“முதற்கட்ட விசாரணையில், இந்த வழக்கில் குற்றவியல் கூறுகள் எதுவும் இனங்காணப்படவில்லை என்றும், இது திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here