போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது

கோத்தாபாரு,  ஜாலான் ஹம்சாவில் உள்ள ஒரு பெட்ரோல்   நிலையத்தில்  நேற்று  நடத்தப்பட்ட சோதனையில் 18,000 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் 0.3 லிட்டர் கெடம் ஆயில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம்   ரொக்கம், ரோலக்ஸ் கைக்கடிகாரம் மற்றும் ஹூண்டாய் கார் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியதாக கிளந்தான் காவல்துறை தலைவர் டத்தோ முஹம்மது ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

காலை 2.20 மணியளவில் பெட்ரோல் நிலையதில் சந்தேகத்திற்கிடமான இருவரை  போலீஸார்  தடுத்து நிறுத்தினர். காருக்குள் சோதனை செய்ததில் மாத்திரைகள் மற்றும் கெடம் ஆயில் கண்டுபிடிக்கப்பட்டது, இவை அனைத்தும் RM180,000 மதிப்புள்ளவை என்று அவர்  கூறினார்.

24 வயது மற்றும் 49 வயதுடைய இருவர் மீதும் குற்றப் பதிவுகள் இருப்பதாக அவர் கூறினார். இருவரும் நண்பர்கள் என நம்பப்படுகிறது. கடத்தல் வழக்கில் தொடர்புடைய சந்தேகநபர்கள், மேலும் மூன்று நாட்களுக்கு தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here