“தனிநபர்களாக இல்லாமல் குழுவாக செயல்படுங்கள் ” ; வியூகம் அமைக்கும் ஜாஹிட்

கோலாலம்பூர், நவம்பர் 12 :

‘தேசிய முன்னணி வேட்ப்பாளர்கள் தனிமனிதனாக செயற்படுவதைக் காட்டிலும் குழுவாக சேர்ந்து செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அதன் தலைவர், டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, தமது கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி உறுப்பினர்கள் தனிப்பட்ட வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும், சக கட்சி உறுப்பினர்களை இழிவுபடுத்துவதையும் கேள்வி கேட்பதையும் நிறுத்த வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில், வலியுறுத்தினார்.

மேலும் வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் தங்கள் வெற்றியைப் பெறுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு தமது கட்சி வேட்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here