கோத்தா கினாபாலு, நவம்பர் 14 :
இன்று திங்கட்கிழமை (நவம்பர் 14) காலை கூடாட் மாவட்டத்தில் உள்ள நீர்க் கிராமமான தஞ்சோங் கபூர் தெங்காவில் பலத்த காற்று வீசியத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த வீட்டின் கூரைகள் பறந்ததுடன் சுமார் 15 வீடுகள் இடிந்தன.
பலத்த காற்று வீசியபோது, பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கனவே வேலை மற்றும் பள்ளிக்கு செல்லும் நோக்கில் வீட்டிற்கு வெளியே சென்றிருந்ததாகவும், சம்பவத்தின்போது அங்கிருந்த சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் அறியப்படுகிறது.
அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பாதைகள் நீரிற்கு மேலே முக்கியமாக ஒட்டு பலகை மற்றும் துத்தநாகத்தால் செய்யப்பட்டவை என்று, மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் மிஸ்ரன் பிசாரா கூறினார்.
சம்பவம்தொடர்பில் தீயணைப்பு துறைக்கு காலை 7.41 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், உடனே தமது குழு சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் கூறினார்.