நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,701 பேர் மொத்தம் 46 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், நவம்பர் 19 :

நாடுமுழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 736 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 2,701 பேர் 46 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை மையம் (நட்மா) தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக ஏழு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு இடங்கள் மண் சரிவுகள் ஏற்பட்டதாகவும், இரண்டு இடங்கள் சாலை இடிந்து விழுந்ததாகவும், மேலும் இரண்டு இடங்களில் பாலங்கள் சேதமடைந்தாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

15வது பொதுத் தேர்தல் (GE-15) வாக்குச் சாவடியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து நட்மா கூறுகையில், பகாங் மற்றும் பேராக்கில் மொத்தம் 299 வாக்காளர்கள் மீட்புப் பணியாளர்களால் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

“இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, மத்திய அனர்த்த முகாமைத்துவக் குழுவின் செயலகத்திலிருந்து பெறப்பட்ட அறிக்கையில், ஒன்பது வாக்குச் சாவடிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here