சிரம்பான், டிசம்பர் 1 :
நேற்று மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கம்போங் கெரு, பத்து கிகிர், கோலப் பிலா ஆகிய இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 11 பேர் கொண்ட மூன்று குடும்பங்கள் பாதிக்கப்பட்டன, என்று நெகிரி செம்பிலான் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர், லெப்டினன்ட் கர்னல் (PA) முகமட் நஸ்ரி மெஸ் காம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் ஆற்றின் அருகே தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது என்றும் ஆனால் அங்கு நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“அப்பகுதியில் தண்ணீர் சுமார் 0.5 மீட்டருக்கு உயர்ந்தது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.