இன்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 2,012 பேருடன் ஒப்பிடுகையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,006 ஆகக் குறைந்துள்ளது.
634 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் பாசீர் மாஸில் உள்ள ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ரந்தாவ்வில் உள்ள சுங்கை கோலோக்கின் நீர்மட்டத்தின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் எச்சரிக்கை அளவான 8.43 மீட்டர் அளவைத் தாண்டியுள்ளது.
அத்தோடு தும்பாட், கோலா ஜம்புவிலுள்ள கோலோக் ஆற்றின் நீர் மட்டம் 1.98 மீட்டராக பதிவாகியுள்ளது, இது அதன் சாதாரண நீர்மட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.