மழைக்காலம் ஆரம்பித்ததை முன்னிட்டு, நெகிரி செம்பிலான் வனப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஜங்கிள் ட்ரெக்கிங் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த இந்தத் தீர்ப்பு காலவரையின்றி அமலுக்கு வரும் என்று மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.
இதன் பொருள் அனைத்து வன சூழல் பூங்காக்கள், PD Forest Sg Menyala மற்றும் Kenaboi மாநில பூங்கா ஆகியவை தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்றும் “இந்த பகுதிகள் காலவரையின்றி பொதுமக்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
“இது மழைக்காலம் என்பதால் நீர் எழுச்சி போன்ற நிகழ்வால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்” என்று நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.